கொரோனா தொற்றில் இருந்து மேலும் 08 பேர் மீண்டனர்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 08 பேர் மீண்டனர்!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 08 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 3 ஆயிரத்து 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதில் 132 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை 50 பேர் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.