வெறிச்சோடிக்காணப்படும் நாட்டின் முக்கிய சுற்றுலாப் பகுதி!

வெறிச்சோடிக்காணப்படும் நாட்டின் முக்கிய சுற்றுலாப் பகுதி!

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் சுற்றுலாத்துறையில் தனக்கென ஓர் இடத்தினை வகிப்பது திருகோணமலை - நிலாவெளி கடற்கரை பிரதேசம். என்றுமே சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் நிலாவெளி கடற்கரை, தற்போது நிலவி வரும் கொரோனா சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளது வருகை தடைப்பட்டதால் வெறுச்சோடிக் காணப்படுகிறது.

இதன் காரணமாக சுற்றுலாத்துறையை தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலாவெளி கடற்கரையிலிருந்து புறாத்தீவு, டொல்பின் மற்றும் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்காக சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு சாவாரி சேவையில் ஈடுபடுவோர் தமது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

சுற்றுலாப் படகுகளில் ஆசனங்கள் பொருத்தப்பட்டதனால் தம்மால் அப்படகுகளை மீன் பிடிக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த தொழிலில் ஈடுபடுவோர் கவலை தெரிவிக்கின்னறர். கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான சுற்றுலாத்துறையானது மீண்டெழுந்து வந்துகொண்டிருந்த நிலையில் இவ்வருடத்தில் ஏற்பட்ட இந்த கொரோனா பேரிடரின் காரணமாக சுற்றுலாத்துறையானது மீண்டும் சரிவினை சந்தித்துள்மை குறிப்பிடத்தக்கது.