பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதி மற்றும் நடத்துநர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதி மற்றும் நடத்துநர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் உள்ள பஸ் நடத்துனர் மற்றும் சாரதிக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளநிலையிலேயே அமைச்சர் மேற்கண்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது..

எதிர்வரும் ஜூலை மாதத்தின் இறுதிப் பகுதியில் முற்கொடுப்பனவு அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பயணச்சீட்டுகளை விநியோகிக்கும் போது பெற்றுக்கொள்ளப்படும் பணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புள்ள நிலையில், அதனை தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறித்த முற்கொடுப்பனவு அட்டைகளை விரைவில் ரயில் போக்குவரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.