இன்று அதிகாலை நாடு திரும்பிய மேலும் 296 இலங்கையர்கள்

இன்று அதிகாலை நாடு திரும்பிய மேலும் 296 இலங்கையர்கள்

கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியாமல் தென்கொரியா மற்றும் கட்டாரில் சிக்கியிருந்த மேலும் 296 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்திலேயே இவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.