வெளிநாடுகளில் சிக்கியிருந்த 135 பேர் நாடு திரும்பினர்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 135 பேர் நாடு திரும்பினர்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 135 பேர் இன்று (20) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதனடிப்படையில் இன்று (21) அதிகாலை 1.20 மணியளவில் கட்டாரில் இருந்து 47 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன் தாய்லாந்தில் இருந்து 88 பேர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.