நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ள விடயங்கள்!

நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ள விடயங்கள்!

ஸ்ரீலங்காவில் இன்றைய தினம் நடைபெறுகின்ற புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு விசேட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இம்முறை நாடாளுமன்றத்துக்கு முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 81 ஆக காணப்படுகின்றது.

அத்துடன் 73 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சி சார்பில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இன்று இடம்பெறும் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் பங்குகற்றவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், இம்முறை பொதுத்தேர்தல் முடிவுகளின் படி ஐக்கிய தேசிய கட்சி எந்த ஒரு விருப்பு வாக்கு ஆசனமும் பெற்றிருக்காத நிலையில், தேசியல் பட்டியல் ஆசனம் ஒன்றை மட்டுமே பெற்றிருந்தது. இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக இதுவரையில் எவரும் பெயரிடப்படவில்லை. இதனால் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் 225 உறுப்பினர்களுள் 223 பேர் மாத்திரமே இடம்பெறுகின்றனர்.

இம் முறை நாடாளுமன்றில் 25 – 40 வயதுக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுள் 81-90 வயதிற்கு இடைப்பட்டவர்கள் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அந்த வகையில் வாசுதேவ நாணயக்கார, இரா. சம்பந்தன், சீ. வீ. விக்னேஸ்வரன் ஆகியோரே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் அடங்கியுள்ளனர்.

மேலும் மிகவும் இளவயது நாடாளுமன்ற உறுப்பினராக ஜீவன் தொண்டமான் இடம்பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற வரலாற்றில் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜெயசேகர மற்றும் விளக்கமறியலில் உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.