தான் பெற்ற பிள்ளைகளையே துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இராணுவ சிப்பாய் கைது

தான் பெற்ற பிள்ளைகளையே துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இராணுவ சிப்பாய் கைது

தான் பெற்ற இரண்டு மகள்கள் மற்றும் மகனை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திவந்த இராணுவ சிப்பாயை கட்டுகஸ்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலி-ஓயா இராணுவ முகாமில் குறித்த சிப்பாய் கடமையாற்றுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபரின் மகள்கள் 12 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், மகன் 14 வயது என்றும் கூறப்படுகிறது.

தந்தையான இராணுவ சிப்பாயின் துஷ்பிரயோகத்தை மேலும் தாங்க முடியாமல் மகன் பொலிசில் புகார் அளித்தார்.

குழந்தைகளின் தாய், துஷ்பிரயோகம் குறித்து அறிந்திருந்தாலும், கணவருக்கு பயந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதைத் தவிர்த்துவிட்டதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதான இராணுவ சிப்பாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.