இலங்கையில் கோழி முட்டைகளின் விலையில் ஏற்பட்ட திடீர் ஏற்றம்
இலங்கையில் கோழி முட்டைகளின் விலை கடந்த சில நாட்களில் கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACEPA) தலைவர் சரத் அத்தநாயக்க இதை தெரிவித்தார்
மக்காச்சோளம் உள்ளிட்ட தீவனத்தின் அதிகப்படியான விலை காரணமாக கோழி பண்ணை வைத்திருப்பவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவதாகவும் இதன் காரணமாகவே முட்டைகளின் விலை உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
55 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மக்காச்சோளம் இப்போது 85 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மக்காச்சோளம் 45% தீவனத்தை உருவாக்கும் முக்கிய பொருட்களில் ஒன்றாகும், இதில் தினசரி 17.7% புரதங்கள் கோழிகளுக்கு அளிக்கப்படுகின்றன. மக்காச்சோளத்தின் விலை அதிகரிப்பால் முட்டைகளின் விலை உயர்கிறது.
எவ்வாறாயினும், ஊரடங்கு உத்தரவு காலத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக முட்டைகளை விநியோகித்ததாக அத்தநாயக்க கூறினார்.
மேலும் இரண்டு வாரங்களில் முட்டைகளின் விலை ஏற்றுக்கொள்ளத்தக்க அளவிற்கு குறையும் என்றும் கோழி பண்ணையாளர்களுக்கு மக்காச்சோளத்தை நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முட்டைகளின் சில்லறை விலை தற்போது ரூ 23.50 ஆகவும், சில பகுதிகளில் ரூ 24 அல்லது 25 ஆகவும் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
ஒரு நாளைக்கு முட்டைகளின் சராசரி நுகர்வு 8.5 மில்லியன் ஆகும். எனினும் தற்போது தினசரி முட்டைகளின் நுகர்வு 30 சதவீதம் குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.