தோனி ஓய்வை அறிவித்த காரணம் இது தான்- வெளியான ரகசியம்..!

தோனி ஓய்வை அறிவித்த காரணம் இது தான்- வெளியான ரகசியம்..!

தோனி ஓய்வு எப்பொழுது என்ற விவாதம் தினம் தினம் நடைபெற்று கொண்டே இருந்த நிலையில், தோனி கிட்டத்தட்ட ஒரு வருட காலம் மௌனம் காத்து வந்தார்.

இதனால் தோனி டி.20 உலகக்கோப்பை வரை விளையாடுவார் என எதிபார்க்கப்பட்ட நிலையில், திடீரென கடந்த (15.08.2020) மாலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் மிக எளிமையான முறையில் அறிவித்து அனைவருக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியளித்தார்

இதனைத் தொடர்ந்து தோனியின் ஓய்வு அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் தோனியின் பாதையை பின்பற்றி ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில், ஒரு வருடமாக மௌனம் காத்து வந்த தோனியும், ரெய்னாவும் கடந்த 15ஆம் திகதி திடீரென ஏன் ஓய்வை அறிவித்தனர் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழாமல் இருக்காது. இந்தநிலையில் இதற்கான காரணம் இதுவாக இருக்கலாம் என்ற தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தேசத்தின் மீது அதிக பற்று வைத்துள்ள தோனி சுதந்திர தினமான நேற்றைய தினத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது ஒரு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, தோனியின் ஜெர்சி எண் "7" சுரேஷ் ரெய்னாவின் ஜெர்சி "3" எண் இந்த இரண்டு எண்களையும் இணைத்தால் 73 என வரும் அல்லவா அதே போல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து நேற்று 73 வருடங்கள் ஆகிவிட்டன, இதனை மையமாக வைத்தே தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்களது ஓய்வை நேற்று அறிவித்தனர் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.