சவுதியில் ஒருவர் கொலை! இலங்கையர் நால்வர் கைது

சவுதியில் ஒருவர் கொலை! இலங்கையர் நால்வர் கைது

வுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த ஒருவரை கொன்றதாக சந்தேகத்தின் பேரில் மேலும் நான்கு இலங்கையர்களை சவுதிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர் காலி ரத்கமவில் வசிக்கும் கந்தாகே பிரியந்த (42வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் அவர் சவுதி அரேபியாவின் தமாம் இல் பணிபுரிந்தபோது 15ஆம் திகதி இவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது, ஆனால் பின்னர் கொலை சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் ஆலோசகர் மாதவ தேசபிரிய இலங்கை வெளிவிவகார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.