இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 134 பேர் சிகிச்சையில் உள்ளனர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 79 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 755 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் 134 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம் இலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 900 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 2 ஆயிரத்து 755 பேர் குணமடைந்துள்ளதுடன், 134 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம் ஏனைய 11 பேரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.