
யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடப்போவதில்லை – உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை அறிவிப்பு
எதிர்வரும் 31 ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறவிருக்கும் யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் தான் விளையாடபொவதில்லை என உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹெலெப் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு விம்பிள்டனை வென்ற சிமோனா ஹெலெப், போட்டியில் இருந்து விலகிய முக்கிய வீராங்கனைகளில் ஒருவர் ஆவார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்திற்கொண்டு நியூயோர்க்கில் நடைபெறவிருக்கும் தொடரில் பங்குகொள்ளப்போவதில்லை எனத் தான் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
தனது உடல்நலத்திற்கு முதலிடம் தருவதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ஐரோப்பாவில் தங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டெஸ்னிஸ் தொடரில் விளையாட மாட்டார் என அறிவித்துள்ளார்.