மூடிய அறைக்குள் மஹிந்தவுடன் பேச்சு - பதவியை துறந்த பந்துல?

மூடிய அறைக்குள் மஹிந்தவுடன் பேச்சு - பதவியை துறந்த பந்துல?

காபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை பேச்சாளராக இருந்த அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது அப்பதவியை நிராகரித்துள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தனது பதவி விலகல் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மூடிய அறையில் கலந்துரையாடிய நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமைச்சுக்கான பணிகளே போதுமானது இதை விட மேலதிகமான பொறுப்புக்கள் தனக்கு வேண்டாமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.