ஆடை ஏற்றுமதியை முறையாக முன்னெடுப்பதற்கு தீர்மானம்

ஆடை ஏற்றுமதியை முறையாக முன்னெடுப்பதற்கு தீர்மானம்

கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்த சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் நிர்மாண நிலையங்களை முறையாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலா தொழிற்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டு சபையின் கட்டுநாயக்க வலய அலுவலகத்தை பார்வையிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தடைப்பட்டுள்ள ஆடை ஏற்றுமதியை முறையாக முன்னெடுப்பது தொடர்பில் வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சுற்றுலா தொழிற்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.