கொட்டகலை தேயிலை தொழிற்சாலைக்கு சான்றிதழ்
கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேயிலை உற்பத்தி செய்யும் உலகின் முதல் தேயிலை தொழிற்சாலை என்ற பணியக தர நிர்ணய சான்றிதலை இலங்கை தேயிலை தொழிற்சாலையொன்று பெற்றுக்கொண்டுள்ளது.
ஹட்டன் - கொட்டகலை மவுண்டன் வர்னன் தேயிலை தொழிற்சாலையே குறித்த சான்றிதலை பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை தர நிர்ணய பணியகம் பரிந்துரைத்த பொருத்தமான சுகாதார ஆலோசனைகளுடன் தேயிலை கொழுந்து பறிப்பது தொடக்கம் தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படும் வரை செயல்படுத்தப்படுகிறதா என்பதை இரண்டு மாதங்களுக்கும் மேலாக கண்காணித்த பின்னரே இந்த நிலையான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.