வடக்கிற்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!

வடக்கிற்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் இரு புகையிரதங்கள் இன்றும் நாளையும் சேவையில் ஈடுபடாதென புகையிரத திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு புகையிரத மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக குறித்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 81 மற்றும் 82 இலக்கங்களை கொண்ட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாதென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.