வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 494 பேர்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 494 பேர்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 494 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

மத்தல மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களை அவர்கள் நேற்றும், இன்று அதிகாலையும் வந்தடைந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து 34 பேரும், கட்டாரில் இருந்து 22 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன் ஓமானில் இருந்து 150 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 288 பேரும் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பிய அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்கள் அணைவரையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.