சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுதற்காக விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் இந்த நடைமுறை அமுல் செய்யப்படுகிறது.

எனினும் ஒரு கைதியை வாரம் ஒன்றுக்கு ஒரு தடவை மாத்திரமே பார்வையிட முடியும் என்று சிறைச்சாலைகள் நிர்வாகத்துக்கான ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 10ம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணங்கவே இந்த நடைமுறை அமுல் செய்யப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமையை அடுத்து கடந்த ஜூலை 8ம் திகதி முதல் சிறைச்சாலைகள் மூடப்பட்டன.

இதேவேளை, இன்று முதல் அமுல் செய்யப்பட்ட திட்டப்படி சிறைக்கைதிகளை அவர்களின் இரத்த உறவுகளே பார்வையிட அனுமதிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் தரப்பு தெரிவித்துள்ளது.