அரசியலமைப்பு திருத்தங்களை செப்டெம்பரில் மேற்கொள்ள திட்டம்- அமைச்சர் சந்திரசேன

அரசியலமைப்பு திருத்தங்களை செப்டெம்பரில் மேற்கொள்ள திட்டம்- அமைச்சர் சந்திரசேன

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள மற்றும் இராஜாங்க அமைச்சர்களை வரவேற்கும் நிகழ்வுகள் இன்றைய தினம் பல பகுதிகளில் இடம்பெற்றன.

அனுராதபுர பகுதியில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, செப்டம்பர் மாதமளவில் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக மேலும் பல பகுதிகளிலும் வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை, எதிர்காலத்தில் வணிகத் திட்டங்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தனது அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.