ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டாளர் இரத்தினபுரி - எத்மய பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து 4 கிராம் 590 மில்லிகிராம் ஹேரோயின், இரண்டு தொலைபேசிகள், சிறைச்சாலை அடையாள அட்டை என்பனவும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர் இரத்தினபுரி - எத்மய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்குரியவரை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் நாளைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.