இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து

இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து

இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள்காட்டி ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த வாழ்த்தினை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சவாலான தருணத்திலும் நாடுகளின் சுதந்திரத்தை போற்றுவது மிகமுக்கியமானது எனவும், இந்திய பிரதமர் மற்றும் அநத்நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்தினை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் 74வது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இன்று காலை பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவிடத்தில் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரனும் யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி சார்பில் மேஜர் ஜென்ரல் பெர்ணாண்டொ ஆகியோரும் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.