மன்னார் புதிய பேருந்து நிலைய மலசலகூட தொகுதி திடீர் மூடல்- மக்கள் பாதிப்பு

மன்னார் புதிய பேருந்து நிலைய மலசலகூட தொகுதி திடீர் மூடல்- மக்கள் பாதிப்பு

மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட புதிய பேருந்து தரிப்பிட வளாகத்தில் காணப்படும் மன்னார் நகர சபையின் கண்காணிப்பில் உள்ள பொது மலசலகூடம் இன்று காலை முதல் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இதனால், இன்று (சனிக்கிழமை) பேருந்து தரிப்படத்திற்கு வந்த மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

மேலும், இன்று காலை மடு திருத்தலத்திற்குச் சென்று மீண்டும் மன்னாருக்கு வந்த மக்கள், மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் உள்ள மலசல கூட தொகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில் இதுகுறித்து மன்னார், நகர சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.