பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவிப்பு

நாட்டில் உள்ள சகல பல்கலைகழகங்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பரீட்சைகளின் நிமித்தம் பல்கலைக்கழகங்களை கட்டம் கட்டமாக திறப்பதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.