லெபனானில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது என லெபனானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக 9 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்தநிலையில் தற்போது 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, "காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதர் ஷானி கருணாரத்ன இன்று தெரிவித்தார்.
மேலும், 250 இலங்கையர்களை ஏற்றிச் செல்லும் விமானம் நாளை இலங்கைக்கு வரவுள்ளது, இதில் காயமடைந்த இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் லெபனானில் தற்போது 25,000 இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.