தொழிலாளர்களுக்கு சேவையாற்றவே தொழிலமைச்சு - நிமல் சிறிபால டி சில்வா

தொழிலாளர்களுக்கு சேவையாற்றவே தொழிலமைச்சு - நிமல் சிறிபால டி சில்வா

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குனர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையில் தொழில் அமைச்சராக பதவியேற்றுள்ள நிமல் சிறிபால டி சில்வா, தொழில் அமைச்சு என்பது தொழிலாளர்களுக்கு சேவை ஆற்றுவதற்காகவே அன்றி தொழில் வழங்குநர் நிறுவனமாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களின் நெருக்கடிகள் பற்றியும், கூட்டுதாபனத்தின் செயற்பாடுகள் பற்றியும், தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.