விசேட சுற்றிவளைப்பு : 414 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பு : 414 பேர் கைது

மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதை பொருள் தொடர்பில் 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 174 பேர் ஹெரோயின் போதை பொருளுடனும் 99 பேர் கஞ்சா போதை பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட காவற்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.