இன்றுடன் நிறைவடைகிறது..

இன்றுடன் நிறைவடைகிறது..

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுகின்றவர்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கான காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சி தங்களது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் இன்னும் பெயரிடவில்லை.

இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எமது மக்கள் சக்தி கட்சியும் இதுவரை தேசிய பட்டியலுக்கான நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யவில்லை.

அந்த கட்சியினால் பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதன் காரணமாக அது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன தமது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவித்துள்ளது.

இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அதன் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது..