கல்முனையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்! எச்சரிக்கையுடன் திப்பியனுப்பிய பொலிஸார்

கல்முனையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்! எச்சரிக்கையுடன் திப்பியனுப்பிய பொலிஸார்

கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர். கல்முனை மாநகர முதல்வரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் காணப்படுவதுடன் ஒரே நுழைவாயிலையே உத்தியோகத்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவ்வளாகத்தில் நின்ற ஒரு பாரிய மரத்தினை வெட்டியமைக்காக பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அநாகரீக வார்த்தைகளால் திட்டியதாக மாநகர சபை முதல்வர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இன்றைய தினம் பிரதேசசபை உத்தியோகத்தர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து ஊர்வலகமாக கல்முனை பொலிஸ் நிலையம் வரை சென்று கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்திக்க முற்பட்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி ஊர்வலமாக சென்ற உத்தியோகத்தர்களை அணுகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரிக்கை செய்த பின்னர் திருப்பி அனுப்பினார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.