நேபாள வெள்ளத்தில் தங்கையை சுமந்தபடி பெற்றோரைத் தேடும் சிறுவன் - நெஞ்சை உருக்கும் துயரம்

நேபாள வெள்ளத்தில் தங்கையை சுமந்தபடி பெற்றோரைத் தேடும் சிறுவன் - நெஞ்சை உருக்கும் துயரம்

வெள்ளத்தின் கோர தாண்டவதால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து வெளிவரும் காணொளிகள் பல மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன.

அவற்றில் ஒன்றாக சிறுவன் ஒருவன் தன் தங்கையைத் தன் கைகளில் ஏந்தியபடி தன் பெற்றோரைத் தேடி அந்தப் பேரழிவின் ஊடாக நடந்து செல்கிற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

நேபாளம் தனது மிக மோசமான வெள்ளப் பேரழிவுகளில் ஒன்றைச் சந்தித்து வருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

 

இடிபாடுகளுக்குள் தேடி வரும் குழந்தை

மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் தேடி வரும் வேளையில், குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.