LPL கிரிக்கெட் இறுதிப் போட்டியில் Jaffna Kings

LPL கிரிக்கெட் இறுதிப் போட்டியில் Jaffna Kings

ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிக்கும் கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) அணிக்கும் இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

தொடரின் இறுதிப் போட்டியானது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) இரவு நடைபெறவுள்ளது.

லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளின் முடிவிலும் இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலின் முதல் (ஜஃப்னா) மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்திருந்தன.

 

ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது

இதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது தகுதிப் போட்டியில் (Qualifier 1) திரில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.

இருப்பினும், வெளியேற்றப் போட்டியில் வெற்றி பெற்று வந்த கொழும்பு கெப்ஸ் அணியை இரண்டாவது தகுதிப் போட்டியில் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, மீண்டும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியை, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரை இணை உரிமையாளர்களாகக் கொண்ட Anchor Sports AB நிறுவனம் தனதாக்கிக் கொண்டுள்ளது.

அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் IPG நிறுவனத்தின் தற்காலிக நிர்வாகத்தில் இருந்த இந்த அணி, தற்போது மீண்டும் நிலையான உரிமையாளர்களின் கீழ் வந்துள்ளது.