நிலாவெளி கடற்கரையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்!
திருகோணமலையில் உள்ள சுற்றுளாத்தளத்தில் நிலாவெளி கடற்கரையும் பிரதான இடத்தை பிடித்துள்ளது.
தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கிருந்து கடல் மார்க்கமாக பயணித்து பார்க்க வேண்டிய தேசிய பூங்காக்களில் ஒன்றாக புறாத் தீவும் முக்கியம் பெற்று சிறந்து விளங்குகிறது.
சுற்றுலாப் பயணிகள்
வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த தீவை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
குறித்த தீவுக்கு செவ்வாயின் படகு மூலமாக பயணிக்க வேண்டியுள்ளதால் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட பகுதியில் அனுமதிக்கான படகு கட்டணமாக ரூபா 8000 செலுத்தி டிக்கட்டை பெறவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஒரு படகில் ஏழு நபர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக இவ்வாறான தேசிய பூங்கா ஊடாக அதிக இலாபம் ஈட்டகூடியதாகவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் அங்கு செல்வதனாலும் அந்நியச் செலவாணிக்கு பெரிதும் குறித்த சுற்றுலா தளம் பங்காற்றி வருகிறது.
பயணிகளின் பாதுகாப்புக்காக காவல் பிரிவின் உயர் பாதுகாப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.