யாழில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது சரமாரியான வாள் வெட்டு!
யாழில் வாள்வெட்டிற்கு இலக்காகி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இராஜகிராமம் ஆண்டாள் வளவு கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பிறேமதாஸன் பிறேம்நாத் (வயது 28) என்பவரே இவ்வாறு படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
நெல்லியடி பேருந்து நிலையப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டுத் தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மூவர் அடங்கிய குழுவினரால் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதில், பாதிக்கப்பட்ட நபரின் தலை, கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து, அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.