சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்! எரிக்சொல்ஹெய்ம் தகவல்

சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்! எரிக்சொல்ஹெய்ம் தகவல்

ஸ்ரீலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பலஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எரிக்சொல்ஹெய்ம் என்கின்ற இந்த நபர் முன்னர் விடுதலைப்புலிகளுக்கு பாரிய வருமானத்தை வழங்குபவராகவும், ஊட்டச்சத்தினை வழங்குபவராகவும் பராமரிப்பாளராகவும் விளங்கியவர், தற்போது இவர் ஒரு சூழல் செயற்பாட்டாளர் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள அவர்,

இந்த நபர் சமாதானத்தை ஊக்குவிப்பதற்கான பாடுபட்டவர், நாங்க ள்ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட்டோம்.

நாங்கள் இந்தியாவுடனும் சமாதான முயற்சிகளை ஆதரித்த ஏனையவர்களுடனும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டோம் , நாங்கள் வெற்றியடைந்திருந்தால் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.