கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,593 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 2844 பேரில் தற்போது 240 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்தோடு 64 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.