யாழில் ஒரே குடும்பத்தை மூவருக்கு நேர்ந்த துயரம் ; சேற்றில் புதைந்த கார்

யாழில் ஒரே குடும்பத்தை மூவருக்கு நேர்ந்த துயரம் ; சேற்றில் புதைந்த கார்

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் குறித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும், மகளும் பயணித்த நிலையில் மகளின் கால்கள்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழர் பகுதியில் கசிப்பு வியாபாரிக்காக பெண்கள் உள்ளிட்ட குழு அடாவடி ; இறுதியில் பொலிஸாரின் அதிரடி

காயமடைந்த மூவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்