யாழ். வடமராட்சி கடலில் அதிகளவாக சிக்கும் இறால்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடலில் தற்போது அதிகளவான இறால்கள் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்படும் இறால் தரம் பிரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கடலில் தற்போது இறால் பிடிபடும் பருவம் என்பதால் வடக்கு கடற்றொழிலாளர்கள் அதிகமான வருமானம் ஈட்டுவதற்கு ஆர்வமாக உள்ளனர்.

இருப்பினும், இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறிய வரத்தால் இறால் தொழிலும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.