நாளையுடன் நிவாரணப் பணிகளை முடிக்க இலக்கு: வெளியான அறிவிப்பு

நாளையுடன் நிவாரணப் பணிகளை முடிக்க இலக்கு: வெளியான அறிவிப்பு

டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு 25,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்ற குடும்பங்களில் 87 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் கொடுப்பனவு வழங்கும் பணிகளில் சிலவற்றை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்ற 450,225 குடும்பங்களில் 87.4 வீதம் சதவீதமானோருக்கு தற்போது கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

நாளையுடன் நிவாரணப் பணிகளை முடிக்க இலக்கு: வெளியான அறிவிப்பு | 25000 Relief Allowance For Ditwa Affected People