மேலும் 3 கொரோனா நோயாளர்கள் பூரண குணம்

மேலும் 3 கொரோனா நோயாளர்கள் பூரண குணம்

இன்றைய தினம் மேலும் 3 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2579 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 251 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.