வீதிக்கு வரும் கடல் நீர் ! காலி - கொழும்பு வீதியில் போக்குவரத்து நெருக்கடி

வீதிக்கு வரும் கடல் நீர் ! காலி - கொழும்பு வீதியில் போக்குவரத்து நெருக்கடி

கடல் அலையுடன் மணல் கரைக்கு வருவதன் காரணமாக காலி - கொழும்பு பிரதான வீதியில் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கஹவ மற்றும் தெல்வத்தைக்கு இடையிலான பிரதேசத்தில் இவ்வாறு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் இந்த நிலைமை நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மாலை வரையில் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

வீதியில் மணல் குவிவதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கடல் பாதுகாப்பு திணைக்களம் இணைந்து வீதியில் மணல் அகற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.