கேரளாவுக்கு மஹிந்த அனுப்பியுள்ள செய்தி

கேரளாவுக்கு மஹிந்த அனுப்பியுள்ள செய்தி

கேளாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இந்த கடினமான நேரத்தில் உங்களுடன் இருப்பதாகவும் அவர் கேரளாவுக்கு அனுதாப செய்தி அனுப்பியுள்ளார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 191 பேருடன் தெற்கு மாநிலமான கேரளாவில் உள்ள விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த சம்பவத்திற்கு ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட பலரும் தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.