தேர்தலில் சரியான தீர்மானத்தைதான் மக்கள் வழங்கியுள்ளனர்: ஐ.தே.க

தேர்தலில் சரியான தீர்மானத்தைதான் மக்கள் வழங்கியுள்ளனர்: ஐ.தே.க

நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மக்கள் சரியான தீர்மானத்தைதான் வழங்கியுள்ளார்களென ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அகிலவிராஜ் காரியவசம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நிறைவடைந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அதிகளவான மக்களின் ஆணை கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் இந்த தேர்தலில் ஐக்கிய தேசியகட்சி பாரிய தோல்வியை சந்தித்துள்ளது.

அதாவது குறித்த தேர்தலில் கட்சி பின்னடைவை சந்தித்தமையினால் ஏற்பட்ட குறைபாடுகள் என்பவற்றின் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவடைந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி, அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தோல்வியடைந்தமையினால் ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றிக்கொள்ள முடியவில்லை.

இதனால் தேசியப்பட்டியலின் ஊடாக ஒரேயொரு ஆசனத்தை மாத்திரம் ஐக்கிய தேசியக்கட்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.