உயர்தரம் முடித்த மாணவர்களுக்கு 5000 ரூபாய் - மகிழ்ச்சித் தகவல்
உயர்தரம் முடித்த மாணவர்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக 5000 ரூபாய் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) நேற்று (24.09.2025) இதற்கான முன்மொழிவு ஒன்றை நாடாளுமன்றத்தில் செய்துள்ளார்.
தொடர்ந்து மன்றில் உரையாற்றுகையில், உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட ரூ. 5,000 வழங்க வேண்டும் என பிமல் ரத்நாயக்க பரிந்துரைத்துள்ளார்.
மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்க்கவும், நல்ல இசையைக் கேட்கவும், கடற்கரைகளுக்குச் செல்லவும், கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்கவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இளைய தலைமுறையினர் வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்பதால், இந்த விஷயத்தைப் பற்றி நான் ஒரு முறை பிரதமருக்கு நினைவூட்டினேன் என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஒதுக்கீடு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.