விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வது குறித்து அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டொன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகளுக்காக, 6 ஆயிரம் மில்லியன் ரூபாயிற்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், அவசியம் ஏற்படும் நிலையில் மேலும் நெல்லை கொள்வனவு செய்வதற்குத் தயாரென நெல் சந்தைப்படுத்தல் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், விவசாயிகளிடமிருந்து நாடு நெல் கிலோ ஒன்று 120 ரூபாயிற்கும், சம்பா நெல் கிலோ ஒன்று 125 ரூபாயிற்கும்.
கீரி சம்பா நெல் கிலோ ஒன்று 132 ரூபாயிற்கும் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.