திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை துண்டாக்கி வீசிய காதலன்; அதிரவைத்த சம்பவம்

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை துண்டாக்கி வீசிய காதலன்; அதிரவைத்த சம்பவம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி, இளம்பெண்ணொருவரின் தலையும் உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன.

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை துண்டாக்கி வீசிய காதலன்; அதிரவைத்த சம்பவம் | Kills And Throws Away Woman Body Uttar Pradesh

பொலிஸ் விசாரணையில், அது Mahewa என்னுமிடத்தில் காணாமல் போன ரச்னா யாதவ் (35) என்னும் பெண்ணுடைய உடல் என தெரியவந்தது.

ரச்னா, கிராமத் தலைவரான சஞ்சய் பட்டேல் (25) என்பவருடன் இரண்டு ஆண்டுகளாக தொடர்பிலிருந்தது தெரியவந்தது. ரச்னா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சஞ்சயை வற்புறுத்திவந்ததுடன் அவரை அவ்வப்போது மிரட்டி பணமும் வாங்கிவந்துள்ளார்.

எப்படியாவது ரச்னாவை ஒழித்துக்கட்ட முடிவு செய்த சஞ்சய், தன் உறவினரான சந்தீப் பட்டேல் மற்றும் தீபக் அஹிர்வார் ஆகியோருடைய உதவியுடன் ரச்னாவைக் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

பின்னார் ரச்னாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அவரது கைகளையும் உடலையும் ஒரு கிணற்றிலும், தலையையும் கால்களையும் ஒரு நதியிலும் வீசியிருக்கிறார்கள்.

சஞ்சயும் சந்தீப்பும் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகிவிட்ட தீபக்கைக் குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு 25,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளார்கள்.