ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் பிரதம வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து
ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் பிரதம வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் பிரதம வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசி அழைப்பின் மூலம் தனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையில் உறவுகளை மேம்படுத்துவதற்கு தாம் பணியாற்ற உள்ளதாகவும் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் பிரதம வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளாவிய ரீதியில் வெளியான தேர்தல் முடிவுகளின் படி ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.