ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரதமராக மஹிந்த பதவியேற்கின்றார்

ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரதமராக மஹிந்த பதவியேற்கின்றார்

2020 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியினை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றில் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள இன்னும் 5 ஆசனங்கள் அக்கட்சிக்கு தேவைப்படுகின்றன.

அந்தவகையில் கூட்டணி கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பெற்றுக்கொண்ட 2 ஆசனங்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கில் பெற்ற ஒரு ஆசனமும் கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பெற்ற ஆசனங்களின் பிரகாரம் அவர்கள் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பானமையை நாடாளுமன்றில் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்க உள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இருப்பினும் அமைச்சரவை பதவியேற்பது உட்பட முக்கிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.