நாட்டில் இரவில் இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இரவில் இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (10) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  பலத்த மழை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வடமேல் மாகாணத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் தென் மாகாணத்திலும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இரவில் இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Heavy Rain With Thunder And Lightning  

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.