சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி உயிரிழப்பு

சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி உயிரிழப்பு

  நுவரெலியா - வலப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது. வலப்பனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி உயிரிழப்பு | Young Woman Dies Under Suspicious Circumstances

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.