14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 73 வயது முதியவர்

14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 73 வயது முதியவர்

இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முளவுக்காடு பகுதியை சேர்ந்த 73 வயதுடைய முதியவர் ஒருவர் 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் ஆலப்புழா வடக்கு பொலி்ஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில் சிறுமியை பாலியல்  பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 73 வயது முதியவர் | 73 Year Old Man Sexually Abused 14 Year Old Girl

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவரை பொலிஸார் தேடி வந்த நிலையில் கண்ணூர் நகரில் ஜி மால் சாலை பகுதியில் அந்த முதியவர்  தலைமறைவாக உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் பொலிஸார், கண்ணூர் பொலிஸார் உதவியுடன் அங்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.