
ட்ரம்பின் அறிவிப்பு முற்றிலும் தவறு.. போர் நிறுத்தத்தை மறுத்த ஈரான்
போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து தற்போது ஈரானுக்கு உடன்பாடு இல்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி(Seyed Abbas Araghchi) கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் ஈரானிய மக்களுக்கு எதிரான தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேலிய ஆட்சி நிறுத்தினால், அதற்கு பிறகும் எங்கள் பதிலைத் தொடர நாங்கள் விரும்பவில்லை.
இருப்பினும், எமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
As Iran has repeatedly made clear: Israel launched war on Iran, not the other way around.
— Seyed Abbas Araghchi (@araghchi) June 24, 2025
As of now, there is NO "agreement" on any ceasefire or cessation of military operations. However, provided that the Israeli regime stops its illegal aggression against the Iranian people no…
மேலும், 'போர் நிறுத்தம்' தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்தை ஈரானின் செய்தி தளங்கள் முற்றிலும் மறுத்துள்ளன.
ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு முறையான அல்லது முறைசாரா போர் நிறுத்த முன்மொழிவு எதனையும் ஈரானிடமிருந்து அவர் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்னும் ஒரு மணிநேரத்திற்குள, போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பு தவறானது என்பதைக் இஸ்ரேலுக்கு ஒரு "செயல்பாட்டு" பதில் மூலம் ஈரான் காண்பிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.